வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கண்காணிக்க மாவட்டம்தோறும் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பணியை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடத்தியதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் அனைத்து […]
