குழந்தை இல்லாத விரக்தியில் கணவன் பேசாமல் இருந்ததால், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாடம்பாக்கத்தில் ஹேமாவதி என்பவர் வசித்துவருகிறார். இவர் சிறுசேரி பகுதியிலுள்ள ஒரு சாப்ட்வேர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் நிறுவன ஊழியரான தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியில் வசிக்கும் […]
