குடும்பம் நடத்த வர மறுத்த தால் கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கலைச்செல்வி கடந்த மாதம் கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
