உத்தரபிரதேசத்தில் பயங்கர புழுதி சூறாவளி மற்றும் மின்னல் தாக்கியதில் 19 பேர் பலியாகியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று பயங்கர வேகமாக வீசியது. அப்போது அதனுடன் சேர்ந்து இடி–மின்னலும் தாக்கியது. இந்த கோர சூறாவளி தாக்குதலில் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதோடு மட்டுமில்லாமல் பல வீடுகள், கடைகள், கட்டிட சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் இடிந்து விழுந்த சுவரில் மாட்டிக் கொண்டும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்துள்ளனர். மேலும் 48 பேர் […]
