Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடும்பை பிடித்து உயிரை எடுத்த இளைஞர் கைது..!!

மொடக்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் உடும்பைப் பிடித்து அதனை கொன்ற குற்றத்திற்காக வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்ட வனத் துறையினர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள  மேலப்பாளையம் சாலைப்பகுதியில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்த வழியாக வெள்ளை சாக்குடன் வந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர் கொண்டுவந்த சாக்கைப் பரிசோதனை செய்தனர்.. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது… இருவருக்கு வலைவீச்சு..!!

மயில்களை வேட்டையாடிய வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகில் வாழ்வார்மங்கலத்தில் குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்து பகுதியில் நேற்று முன்தினம் மாலை பொழுதில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதையடுத்து, அதிர்ச்சியடைந்த வாழ்வார்மங்கலம் பொதுமக்கள் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டு மயில்களை வேட்டையாடி கொண்டிருந்தனர். அதில், 2 பேர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்லால் மானை அடித்துக் கொன்ற நபர் கைது… 5 பேர் தலைமறைவு!!

கல்லால் மானை அடித்துக் கொன்ற ஆறு பேர் கொண்ட கும்பலில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வன கோட்டத்தில் உள்ள கேர்மாளம் வனச்சரகத்திற்குற்பட்ட சிக்குநள்ளி வனப்பகுதியில் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கேர்மாளம் வனச்சரக அலுவலர் அமுல்ராஜ், வனத்துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது சிக்குநள்ளி வனப்பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் புள்ளிமானை வேட்டையாடி மான் இறைச்சியை கூறுபோட்டு கொண்டிருந்தனர். வனத்துறையினரை […]

Categories

Tech |