குடியுரிமை திட்டத்திற்கு எதிராக கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக எல்லையான களியக்காவிளை முதல் கேரளா கர்நாடக எல்லையான காசர்கோடு வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசினுடைய குடிமை சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கேரள அரசு சார்பில் இந்தியாவிலேயே […]
