கார் ஓட்டுனரை இரும்பு குழாயால் தாக்கி கொலை மிரட்டல் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் வசந்த ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதனால் வசந்த ராஜ் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு வந்த ரமேஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை இரும்பு குழாயால் தாக்கி பின் கொலை […]
