மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 க்கு உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் கல்வித்துறை செயலாளர் தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களைக் கூற மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் முனைவர் அ.மாயவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணத்தை கூறியுள்ளார். அதாவது மாநிலப் பட்டியலில் […]
