சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார் ஆகியோருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கவிஷ்கா.. இந்த சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது.. சிறுமியின் தந்தை கார்த்திக் பண உதவி ஏதும் கிடைக்காமல் மிகுந்த மனவேதனையில் தவித்து வந்தார். இதையடுத்து நந்தம்பாக்கம் காவல்துறை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள் […]
