ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமான படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விபத்து நடந்த இடத்தை இராணுவத்தினரும், காவல்துறையினரும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழையாதவாறு சீல் வைத்தனர். இந்நிலையில் ஹெலிகாப்டரின் எஞ்சின் போன்ற ராட்சத பாகங்கள் […]
