மலை மீதுள்ள கோவிலுக்கு வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லுதேவன்பட்டி கிராமத்தில் பொன் கலை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரசாத் தனது நண்பர்களுடன் மலை மீதுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிரசாத் மலைமீது ஏறிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய நண்பர்கள் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]
