குஜராத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் கழுத்தளவு வெள்ளத்தில் பச்சிளங்குழந்தையை தலையில் சுமந்து சென்று காப்பாற்றியது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது . கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலம் வதோதராவில் பெய்துவரும் கனமழை காரணமாக அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணியில் மீட்புபடையினர் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் விஸ்வாமித்திரி ரயில் நிலையம் அருகில் உள்ள தேவி புரா பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் கோவிந்த் சாவ்தா கழுத்தளவு தண்ணீரில் இறங்கி பச்சிளங்குழந்தையை தலையில் சுமந்து சென்று […]
