ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். குஜராத்தின் இளம் அரசியல்வாதியான ஹர்திக் பட்டேல் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டிருந்தார். அந்த இந்தி பதிப்பின் தமிழாக்கம்: ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஹர்த்திக் தனது சமூக மக்களுக்கு குரல் கொடுக்கிறார். வேலையில்லாத மக்களுக்கு வேலை கேட்கிறார். […]
