நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகைகளை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் தொகுதியில் சகிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் தனது தோழி ஜெரினா என்பவருடன் தனது வீட்டிற்கு முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்து சகிலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து […]
