இணைய சேவைகளைத் தொடங்கும்படி மாநில அரசுக்கு குவஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அங்கு இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததிலிருந்தே வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறியது. இதையடுத்து மசோதா சட்டமானதைத் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்தது. மாணவர்கள் மட்டும் கலந்துகொண்ட போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியது. இதை முடக்கும் விதமாக இணைய சேவைகள் அசாமில் துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் சார்பாக பொதுநல வழக்கு […]
