சொத்து பிரச்சனை தகராறில் நாட்டு துப்பாக்கி வைத்து அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கும் அவரது சகோதரரான சந்தோஷ் என்பவருக்கும் தந்தையின் சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் தனது தாய் பெரியதாயிடம் கூறியுள்ளார். […]
