நாற்றுகள் நன்கு வளர்ந்த நிலையில் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு மற்றும் தரங்கம்பாடி அதனை சுற்றியுள்ள பகுதிகளான நல்லாடை பரசலூர், மேமாத்தூர், கீழமாத்தூர், செம்பனார்கோவில், காலகஸ்தி, நாதபுரம், ஆறுபாதி, விளநகர், இலுப்பூர், சங்கரன்பந்தல் போன்ற பகுதிகளில் விவசாயிகள் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் பணியினை தொடங்கி உள்ளனர். கடந்த மாதம் அப்பகுதி விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து இருந்தனர். தற்சமயத்தில் நாற்றங்கால்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து நடவு செய்யும் […]
