தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பணப் பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு நெல்லை மாவட்டத்தில் 15 பறக்கும் படைகளும் மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பறக்கும்படையினர், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வீடியோ […]
