கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். இறுதிவரை சென்ற சோழன்குடிகாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் […]
