அரசு இராசாசி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று அதிகாலை நோயாளி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையயும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கரும்பாலையில் வசித்துவரும் முருகன் என்பவர் நரம்புத் தளர்ச்சி காரணமாக கடந்த […]
