ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் மேம்பாலத்திலிருந்து சத்தியமூர்த்தி நகர் பக்கிங்காம் கால்வாய் வரை 40 அடி அகலம் உள்ள சர்வீஸ் சாலை இருக்கின்றது. இந்த சாலையை ஒட்டி 6 அடி அகல இடம் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்து வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் கடைகளை கட்டியிருக்கின்றனர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த […]
