அரசுக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைக்க முயன்ற மக்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சன்னதி புதுக்குளம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு காலனி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தற்போது இடியும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தில் பண்ணை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதனை அடுத்து அரசுக்கு […]
