14 நாட்களுக்குள் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து பல கட்டங்களாக அமலில் இருப்பதால், பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்த பல பெற்றோர்கள் தற்போது வருமானமின்றி […]
