இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் பெண்ணிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்திலுள்ள சேலம் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர். இவர் நேற்று திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக காத்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பாப்பாத்தியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கரூர் காவல் நிலையத்தில் பாப்பாத்தி அம்மாள் […]
