ஆடுகளை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியில் விவசாயியான மணிகண்ட சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் இரண்டு ஆடுகள் காணாமல் போனதால் அனைத்து இடங்களிலும் மணிகண்ட சாமி அதனை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் ஆடுகள் கிடைக்காததால் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான […]
