சிறுத்தை புலி ஊருக்குள் நுழைந்து செம்மறி ஆட்டை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் பாம்பே கேசில் பகுதிக்குள் சிறுத்தைப்புலி ஒன்று நுழைந்துவிட்டது. இந்நிலையில் இந்த சிறுத்தைபுலி அப்பகுதியில் இருந்த வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆட்டை கடித்து இழுத்து சென்றுள்ளது. இது குறித்து அறிந்த அதிகாரிகள் மீண்டும் சிறுத்தைப்புலி வராமல் இருப்பதற்காக அந்த குடியிருப்பு பகுதிகளை சுற்றி இருக்கும் முட்புதர்களை வெட்டி அகற்றியுள்ளனர். இவ்வாறு சிறுத்தை புலி […]
