ஆம்புலன்சில் வைத்து பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஊழியர்களை உறவினர்கள் பாராட்டியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான நிர்மலாதேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிர்மலாதேவியை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் வேகமாக அரசு மருத்துவமனையை நோக்கி சென்றுள்ளது. ஆனால் நிர்மலா தேவிக்கு வலி அதிகமானதால் ஊழியர்கள் ஆம்புலன்சில் […]
