பாகிஸ்தானில் கன்டெய்னரை திறக்கும் போது விஷ வாயு தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருக்கும் கேமாரி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்குக் கப்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரம்பிய கன்டெய்னரை ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அதை தொடர்ந்து அந்த கன்டெய்னர் அருகில் இருக்கும் ஒரு சந்தைக்கு எடுத்து கொண்டு செல்லப்பட்டது. சந்தைக்கு வந்ததும், அங்கே காய்கறிகளை தனி தனியாக […]
