சட்ட விரோதமாக வீட்டின் கழிவறைக்கு அருகில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பாலக்கரை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நவலடியான் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது கழிவறைக்கு பக்கத்தில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]
