சொகுசு காரில் 21 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த காருக்குள் பொட்டலம் பொட்டலமாக 21 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் உறையூரில் வசிக்கும் ஆனந்தன், […]
