அதிரடிப்படை என்று தொழிலதிபரின் காரில் சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற மோசடி கும்பல் சிக்கியது. பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை , போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முறையான ஆவணமில்லாதவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கி சோதனை என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலும் சில இடங்களில் கைவரிசை காட்டுகிறது. […]
