வனசரக அதிகாரியை கைது செய்ததற்காக வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் சிலர் தங்கியிருந்தனர். இந்நிலையில் இரவு நேரங்களில் அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியே நின்று கொண்டிருந்ததால் வனசரக அதிகாரியான ஜெயச்சந்திரன் அவர்களை உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் வனச்சரக அதிகாரிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வனச்சரகர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை நீதிமன்றம் தலைமை எழுத்தர் கொடுத்த […]
