வனப்பகுதியில் உள்ள குரங்குகள் தண்ணீரை தேடி அலைவதால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாலமலை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள விலங்குகளுக்கு வனப்பகுதியில் உள்ள சிறிய தாவரங்கள் மற்றும் புற்புதர்கள் உணவாக இருக்கின்றன. மேலும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள குட்டையில் தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்கின்றன. இந்நிலையில் அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்படுகின்றது. அதனுடன் குளம், குட்டைகள் அனைத்தும் வறண்டு போயிருப்பதால் குரங்குகளும் […]
