தஞ்சை: இஸ்லாமிய இளைஞர்கள் ஆதரவற்ற நிலையில் வசித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆதரவற்ற நிலையில் வசித்துவந்தவர் தேவி (70) என்ற மூதாட்டி. இவருக்கு உறவினர் யாருமில்லாத நிலையில் அந்தப் பகுதியிலுள்ள வீடுகளில் யாசகம் பெற்று வாழ்ந்துவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இருந்தும் நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார். […]
