ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாலைகள் மற்றும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் போக்குவரத்து நெரிசல் […]
