தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு உணவு பார்சல்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதிகாரிகள் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விஜயபுரத்தில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
