கோடைகால சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மலர் செடிகளும், நூற்றாண்டு கால பழமைவாய்ந்த காகிதம், யானைக்கால், ருத்ராட்சை போன்ற ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் 23 ரகங்களை சேர்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மலர் நாற்றுகள் கோடை சீசனை முன்னிட்டு நடைபெறும் மலர் கண்காட்சிக்காக பூங்காவில் நடவு […]
