மீனவரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் மீனவரான இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இருதயராஜை அந்தோணி என்பவர் மதுபோதையில் அவதூறாக பேசியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து மதுபோதையில் அந்தோணி தகாத வார்த்தைகளால் இருதயராஜை திட்டியதால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்தோணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இருதயராஜை அருகில் […]
