கிரேக்கத்தின் முதல் பெண் பிரதமராக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பதவியேற்கவுள்ளார். இரண்டு எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். உயர் நிர்வாக நீதிமன்றமாக கருதப்படும் மாநில கவுன்சிலின் தலைவராக 15 மாதங்கள் பணியாற்றியுள்ளார் 63 வயதான கத்ரினா சக்கெல்லரோபௌலோ. இவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 300 வாக்குகளுக்கு 200 வாக்குகள் எடுத்துள்ளார் என ஸ்டெலியோஸ் பெட்சாஸ் என்னும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மைய- இடது எதிர்கட்சிகள் இரண்டும் இவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. […]
