மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பெரிய குளத்தின் ஒரு பகுதியில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதனையடுத்து மளமளவென பற்றிய தீயால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமலும், மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் […]
