குடும்பத் தகராறில் வாலிபர் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தில் பாக்யராஜ்- வைத்தீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வைத்தீஸ்வரி தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கோபத்தில் பாக்யராஜ் தனது வீட்டிற்கு தீவைத்து கொளுத்தி உள்ளார். இதனால் அருகில் இருக்கும் சுசிலா என்பது வீட்டிற்கும் […]
