செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டிய வாலிபருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கண்ணாடி அருகே செல்போனை வைத்துக்கொண்டு அதில் சீரியல் பார்த்தபடி வாகனத்தை இயக்கியுள்ளார். இதனையடுத்து ஆர்வமாக சீரியல் பார்த்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டிய அந்த வாலிபரை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி […]
