டெல்லியில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் மிதாலி சந்தோலா நொய்டாவை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று தந்து வேலையை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள அசோக் நகரில் கார் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்மநபர்கள் கும்பல் வழிமறித்து , காரின் மீது முட்டைகளை வீசியது. மேலும் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பத்திரிக்கையாளர் மிதாலியின் வலது கையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து குண்டு பாய்ந்து […]
