தந்தை, மகன்களை உறவினர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வசந்த், சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் செல்வத்திற்கு உதவியாக இருந்துள்ளனர். இந்நிலையில் செல்வத்தின் சித்தப்பாவான ராமலிங்கம் மற்றும் அவரது மகன்களான முருகானந்தம், குமார் போன்றோர் இணைந்து வாழை இலை வியாபாரம் செய்வதற்கு கும்பகோணத்தில் கடை பிடித்து தருமாறு செல்வத்திடம் கேட்டுள்ளனர். […]
