மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திப் பிரஜாபதி. இவரது மகன் கரன் ஓம்பிரகாஷ். 10 வயதே ஆன கரன் டிசம்பர் 29 அன்று இரவு 11.30 மணி அளவில் தனது வீட்டிலிருந்து அலறியதையும் மற்ற குழந்தைகள் அவனை அடிக்க வேண்டாம் என்று கத்தியதையும் அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். மறுநாள் குழந்தைகளின் அத்தை வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் யாரும் கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த போது கரன் […]
