முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். ஐபிஎல் தொடரில் தனது மிரட்டலான பந்துவீச்சின்மூலம் பல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதன்பலனாக கடந்த ஆண்டு ஐயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். ஆர்ச்சரின் வருகையில் […]
