வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வயலூர் பகுதியில் விவசாயியான மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் வயலுக்கு முதலில் யார் தண்ணீர் பாய்ச்சுவது என்பது தொடர்பாக சுரேசுக்கும் மருதுபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுரேஷ் அங்கிருந்த மரக்கட்டையால் மருதுபாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். […]
