பயிரை நாசம் செய்வதால் அரிசியில் விஷம் கலந்து மயில்களை கொன்ற விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூவல்குட்டை பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் மலைப்பகுதியிலிருந்து ரமேஷின் விவசாய நிலத்துக்கு இரை தேடி அதிகமான மயில்கள் வந்து செல்கின்றது. அதன்பின் மயில்கள் நிலத்திற்கு வந்து மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்துவதால் அதை கொள்வதற்காக அரிசியில் விஷத்தை கலந்து நிலத்தில் வைத்துள்ளார். இதனையடுத்து வழக்கம்போல […]
