அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை, வட்டாட்சியர் ரவி தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்புடன் அளவீடு செய்து மீட்டனர். சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலம் பள்ளப்பட்டி, பெரிய ஏரிக்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, சட்ட விரோதமாக போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.தகவலறிந்த திருக்கோயில் தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கூற, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
