ஆரணி அருகே கிளினீக் நடத்திய போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள களம்பூர் மருத்துவமனை தெருவை சேர்ந்த 40 வயதுடைய ரவி என்பவர் குன்னத்தூரில் கிளினீக் நடத்தி வருகிறார்.. பி.ஏ. படித்துள்ள இவர் எம்.பி.பி.எஸ். படித்ததாக கூறி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருவதாக ஆரணி மருத்துவ அலுவலர் நந்தினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் குன்னத்தூருக்கு விரைந்து சென்று, அங்குள்ள ரவியின் கிளினீக்கில் திடீர் சோதனை மேற்கொண்டனர். […]
